பலத்த மழை மற்றும் நீர் மட்டம் உயர்வால் புனேயில் உள்ள இந்திராயானி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய பாலம் இடிந்து விழுந்ததில் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மேலும் பலர் நீரில் மூழ்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் தலேகானில் உள்ள குண்ட்மாலா அருகே இந்திராயானி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய பாலம், இன்று இடிந்து விழுந்தது. 2பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிசை தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
