ரெட்ரோ திரைவிமர்சனம்

திரைக்கதை

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு ஆளாகும் பாரிவேல் கண்ணனை (சூர்யா) தத்தெடுத்து வளர்க்கின்றனர் திலகன் (ஜோஜு ஜார்ஜ்) – சந்தியா (ஸ்வாசிகா) தம்பதி. பாரி மீது வெறுப்புடனே இருக்கும் திலகன், எதிரிகளிடமிருந்து தன் வளர்ப்பு மகன் தன்னை காப்பாற்றிய தருணத்தில் அவரை தன் மகனாக ஏற்றுக் கொள்கிறார்.

தந்தையின் அடிதடி, கடத்தல் உள்ளிட்டவற்றை முன்னின்று செய்யும் பாரி, தன் காதலி ருக்மணியை (பூஜா ஹெக்டே) திருமணம் செய்வதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறார். ஆனால் ஒரு கடத்தல் விவகாரத்தில் தந்தைக்கு தெரியாமல் ஒரு காரியத்தை செய்வதால் பாரிக்கும் திலகனுக்கும் மோதல் வெடிக்கிறது. இதில் காதலி கண்முன்னே வளர்ப்புத் தந்தையின் கையை வெட்டியதால் பாரியின் திருமணம் நிற்கிறது, காதலியும் கோபித்துக் கொண்டு வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுகிறார்.

சிறையில் இருக்கும் பாரியை  ஒரு கும்பல் சிறையிலிருந்து தப்பிக்கச் செய்கிறது. ஆனால், அந்த கும்பலை அடித்துவிட்டு தப்பிக்கிறார் பாரி. ஒரு பக்கம் அந்த கும்பல் தேட, இன்னொரு பக்கம் வளர்ப்பு தந்தையின் ஆட்கள் தேட, தன் காதலியை தேடி புறப்படுகிறார் பாரி. காதலியுடன் அவரால் சேர முடிந்ததா? பாரியை தேடிக் கொண்டிருக்கும் கும்பலின் பின்னணி என்ன என்பதே ‘ரெட்ரோ’ படத்தின் திரைக்கதை.

படத்தின் பிளஸ்

படம் தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்‌ஷனுக்கான களம் என்றாலும் கூட, அதை காதல் கோணத்தில் சொல்லிஇருப்பது. காதல் காட்சி. படத்தின் மிகப் பெ‌ரிய பலம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான். படம் முழுக்க பின்னணி இசையில் மனுசன் எல்லாரு பல்ஸ் புடிச்சி ஒரு ஆட்டம் போடா வச்சிருக்கார்.  கனிமா பாடல் ஆட்டம் போடா வைக்கும் தவிர மற்ற பாடல்களும் ரசிக்கும்படி உள்ளன. ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு அழகு.

சூர்யா படம் முழுக்க காதல் காட்சிகள், ஆக்‌ஷன் காட்சிகளில் வில்லன்களிடம் ஆக்ரோஷம் காட்டுவது,மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார்.பூஜா ஹெக்டேவுக்கு முக்கியமான கதாபாத்திரம். ஜோஜு ஜார்ஜு, பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஜெயராம், நாசர் எல்லாம் படத்தில் எதற்கு என்று தெரியவில்லை நடிக்க வேலை இல்லை.

இரண்டாம் பாதியில் கதை அந்தமானில் இருக்கும் ஒரு சிறிய தீவுஇக்கு கதை செல்கிறது. பிரிட்டிஷ் காலத்து அடிமை முறைகள் , மிராசுதாரர் குடும்பம், ரப்பர் தொழிலாளர்கள், கல்ட், தீர்க்கதரிசனம் என இஷ்டத்துக்கு எழுதப்பட்ட திரைக்கதை சலிப்பை தருகிறது.ஒட்டுமொத்தமாகவே ஆக்‌ஷன் காட்சிகள் ஒருவித மந்தநிலையில் இருப்பதை உணரமுடிகிறது. சண்டை கட்சிகள் வழக்கமானதுதான் சூர்யா படம் போல தான்.

அடிமைகளை மீட்கும் ரட்சகன், மகாபாரத குறியீடுகள் எல்லாம் இருந்தாலும் ஒரு நேர்த்தியான திரைக்கதை இல்லாததால் அவை பெரிதாக எடுபடவில்லை. முதல் பாதி ரொமான்ஸ் காட்சிகளில் இருந்த சுவாரஸ்யமும் எமோஷனல் தருணங்களும் ஓரளவு இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் இது சூர்யா + கார்த்திக் சுப்பராஜின் ஒரு சிறப்பான தரமான ‘சம்பவம்’ என்று சொல்லி இருக்கலாம்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading