இந்தியா அரசு சார்பில், பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
Padma bhushan Ajith Kumar
கடந்த 25 ஜனவரி 2025 அன்று, பத்ம விருதுக்கு தேர்வானவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.
இதில், பத்ம விபூஷண் விருதுக்கு 7 பேர், பத்ம பூஷண் விருதுக்கு 19 பேர், பத்ம ஸ்ரீ விருதுக்கு 113 பேர் என மொத்தம் 139 பேர் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Padma Shri Ravichandran Ashwin
இவர்களுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது.
இன்றைய விழாவில், தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலைஞர் தாமு உள்ளிட்ட விருதுக்கு தேர்வுக்கு செய்யப்பட்டவர்களுக்கு, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்ம விருதுகளை வழங்கினார்.
நடிகர் அஜித்குமார் விருது பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.