சுந்தர்.சி இயக்கத்தில்தான் ரஜினியின் 173-வது படம்! கமல் திட்டம் வெற்றி

சுந்தர்.சி இயக்கத்தில்தான் ரஜினியின் 173-வது படம் உருவாகவிருக்கிறது.

ரஜினியின் அன்பு நண்பரான கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம்தான் இப்படத்தை தயாரிக்கிறது.



28 வருடங்களுக்கு முன்பு ரஜினியை வைத்து ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கியிருந்தார் சுந்தர் சி.

28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரஜினியோடு இணைகிறார் என்டர்டெயினிங் இயக்குநர் சுந்தர் சி!

இந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டிருக்கும் கமல்ஹாசன், “காற்றாய் அலைந்த நம்மை தனதாக்கியது.

இரு பனிப் பாறைகள் உருகி வழிந்த இரு சிறு நதிகளானோம். மீண்டும் நாம் காற்றாய் அலையாய் மாறுவோம். நமைக் காத்த செம்புலம் நனைக்க நாழும் பொழிவோம், மகிழ்வோம்!

வாழ்க நாம் பிறந்த கலைமண்.” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

இப்படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் விநியோகம் செய்கிறது.

2027-ம் ஆண்டு பொங்கலுக்குப் இப்படம் வெளியாகும் எனவும் அறிவித்திருக்கிறார்கள்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading