‘கூலி’ திரைப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே சென்னை, விசாகப்பட்டினம், டில்லி, மும்பை, தாய்லாந்து போன்ற இடங்களில் நடைபெற்று முடிந்த நிலையில், மீண்டும் சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளின் தொடர்ச்சியாக எண்ணூர் துறைமுகத்தில் தற்போது ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் ரஜினி, சத்யராஜ், உபேந்திரா சம்பந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கி வருகிறார்.
கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாத இறுதியில் இந்த படத்தை வெளியிட வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‛ஜெயிலர் 2′ படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.