தமிழ்நாட்டில், மார்ச் 3 முதல் 25 வரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளும் நடைபெற்றன. 12ஆம் வகுப்பு தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள் உள்ளிட்ட 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினர்.
இதையடுத்து தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் மே 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப செயல்முறையை முன்கூட்டியே தொடங்க உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில் பொறியியல் படிப்புகளில் சேர இணையவழியில் நாளை மறுதினம் முதல் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன், விண்ணப்பப் பதிவை தொடங்கி வைத்து, கலந்தாய்வு அட்டவணை, விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள் உள்ளிட்ட விவரங்களை வெளியிட உள்ளார்.பொறியியல் படிப்பில் சேர நாளை மறுதினம் முதல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் சேர நாளை மறுதினம் முதல் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதியும், கல்லூரிகளில் சேர்க்கை நடைமுறைகளை விரைவுபடுத்தும் நோக்கிலும் இந்த ஆண்டு பொறியியல் விண்ணப்பப் பதிவு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தொடங்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்கவும், அவர்கள் முன்கூட்டியே திட்டமிடவும் இந்த புதிய முறை உதவும் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.