தென் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் திடீரென காணாமல் போகிறார். இதுகுறித்து அந்தப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் கேத்ரின் தெரசா கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் கடிதம் எழுதுகிறார்.புகார் கடிதத்தில் அந்த ஊர் சேர்மன் கோபி மீது சந்தேகம் இருப்பதாக சொல்லி இருக்கிறார். அந்த புகாரின் பேரில் அண்டர் கவர் போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை நியமிக்கிறது. இதை சுந்தர் சி கண்டுபிடித்தார ? என்பது கதை.
இந்த நிலையில் மாணவி காணாமல் போனதற்கு மைம் கோபி அண்ணன் மகன் தான் காரணம் என தெரிந்து கொள்ளும் சுந்தர் சி, அவரை கடுமையாக தாக்குகிறார். வெளிநாட்டில் மறைந்து வாழ்ந்து வரும் தனது தந்தை ஹரீஷ் பெராடியை அழைக்கிறார். ஹரீஷ் பெராடி வந்த பிறகு என்ன நடந்தது? யார் அந்த அண்டர் கவர் போலீஸ் அதிகாரி? உண்மையில் சுந்தர் சி.க்கும், ஹரீஷ் பெராடிக்கும் என்ன தொடர்பு? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதி கதை.

ஏற்கனவே வெளியான ‛வின்னர், தலைநகரம்’ போன்ற படங்கள் இயக்குனர் சுந்தர் சி, நடிகர் வடிவேலு காம்பினேஷனில் ரசிகர்களுக்கு காமெடி விருந்து ஆக அமைந்தது. இயக்குனர் சுந்தர் சி.,யின் பலமே காமெடிதான். அதை மீண்டும் கையில் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு தனது சக்சஸ் பார்முலாவை பயன்படுத்தி ஹாட்ரிக் வெற்றி அளித்துள்ளார்.
படத்தின் மெயின் பில்லர் ஆக வடிவேலு கலக்கி இருக்கிறார். ஏராளமான கெட்டப்புகளில் படம் முழுக்க பவனி வரும் வடிவேலுவுக்கு பெண் வேடம் மாஸ்டர் பீஸ் கெட்அப். ஆசிரியையாக வரும் கேத்ரின் தெரசா நடிப்பு கதைக்கு பலமாக உள்ளது. கொஞ்ச நேரம் வந்தாலும் வாணி போஜன் மனதில் பதிகிறார். வில்லன் கேரக்டரில் ஹரீஷ் பெராடி, அருள்தாஸ், மைம் கோபி ஆகியோர் மிரட்டியுள்ளனர். இவர்களோடு சந்தான பாரதி, விச்சு, பக்ஸ், முனீஸ் காந்த் ஆகியோர் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகின்றனர்.
கிருஷ்ணமூர்த்தியின் ஒளிப்பதிவு ரசிக்கும் படியாக உள்ளது.சி.சத்யா இசையில் திருவிழா பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் திரைக்கதைக்கு ஏற்றார் போல் உள்ளது.
வடிவேலு போன்ற காமெடி ஜாம்பவானை சரியாக பயன்படுத்தி ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். தற்போதைய சூழலில் ரசிகர்களை 2 மணி நேரம் இருக்கையில் உட்கார வைப்பது என்பது முடியாத காரியமாக இருக்கும் வேலையில், 2:40 நிமிடத்திற்கு ரசிகர்களை இருக்கையில் அமர வைத்தது இயக்குனரின் பிளஸ். அதேநேரம் முதல் பாதி முழுவதும் ஜவ்வு போல் இழுத்து இன்டர்வல் பிளாக் காட்சிக்காக பொறுமையை சோதித்துள்ளார். முதல் பாதியில் சோதித்த பொறுமையை இரண்டாம் பாதியில் சரிகட்டி விட்டார
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.