சென்னை அணிக்கு மீண்டும் மீண்டும் தோல்வி!

என்னதான் ஆச்சே இந்த சென்னை டீம்க்கு இப்படி தோல்வி மேல் தோல்வி.

ஸ்ரேயாஷ் ஐயர் டாஸை வென்று முதலில் பேட்டிங்கை எடுத்தார். 180+ ஸ்கோரை போதும் சிஎஸ்கேவை மண்ணை கவ்வ வைக்கலாம் என்பதுதான் அவரின் திட்டம். ஆனால், போட்டி தொடங்கியவுடனே அதிர்ச்சி அடைய வைத்தது கலீல் அஹமது, முகேஷ் சௌத்ரி, அஷ்வின் என சென்னையின் பௌலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்துக்கொண்டே இருந்தனர். பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஷ் ஐயர், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் என ஒரு முனையில் விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது.

ஆனால், இன்னொரு முனையிலிருந்து சென்னையின் பௌலர்களை விழி பிதுங்க வைக்கும் வகையில் பிரியான்ஷ் அட்டாக் செய்துகொண்டே இருந்தார். கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டுதான் தொடங்கினார்.

முகேஷ் சௌத்ரியின் ஓவரிலும் பவுண்டரியையும் சிக்சரையும் அடித்துக் கொண்டே இருந்தார். அஷ்வினின் முதல் ஓவரில் 21 ரன்கள். பிரியான்ஷ் மட்டும் ஒரு பவுண்டரியையும் சிக்சரையும் அடித்திருந்தார். 12 வது ஓவரிலும் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார்.

பதிரனாவின் ஓவரில் மட்டும் தொடர்ச்சியாக 3 சிக்சர்களை பறக்கவிட்டார். 39 பந்துகளிலேயே சதத்தை எட்டிவிட்டார். 170 ரன்களுக்குள் பஞ்சாபை கட்டுப்படுத்தி விடலாம் என நினைத்த சென்னை ரசிகர்களின் எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டார். 103 ரன்களில் நூர் அஹமதுவின் பந்தில் இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயன்று லாங் ஆனில் கேட்ச் ஆனார். மிரட்டலான இன்னிங்ஸ். குறிப்பாக, சென்னை அணியின் நம்பிக்கையை உடைத்துவிட்ட இன்னிங்ஸ். ஸ்ரேயாஷின் எண்ணத்தை நிறைவேற்றிய இன்னிங்ஸ்.

பிரியான்ஷூக்கு 24 வயதுதான் ஆகிறது. டெல்லியை சேர்ந்தவர். தமிழ்நாடு ப்ரீமியர் லீகை போல அங்கே நடக்கும் டெல்லி ப்ரீமியர் லீகில் ஒரு போட்டியில் ஓவரின் 6 பந்துகளையும் சிக்சராக மாற்றி அசரவைத்தார். 2024 டெல்லி ப்ரீமியர் லீகில் 608 ரன்களை அடித்து அந்தத் தொடரின் அதிக ரன்களை அடித்த வீரராக உருவெடுத்திருந்தார். அதேமாதிரி, சையது முஷ்டாக் அலி தொடரிலும் டெல்லி அணியின் அதிக ரன்களை அடித்த வீரராக ஒரு சீசனில் இருந்திருக்கிறார். இதனால்தான் அவரை ஏலத்தில் போட்டி போட்டு 3.8 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கியது.

நடப்பு சீசன்களை இளம் வீரர்களுக்கான சீசன் எனலாம். அந்த அளவுக்கு இளம் வீரர்கள் அடுத்தடுத்து சாதித்து வருகின்றனர். பிரியான்ஷூம் இந்த இன்னிங்ஸின் மூலம் பஞ்சாபின் தவிர்க்க முடியாத வீரராக மாறியிருக்கிறார்.

இதனால் 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 219 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 220 எடுத்தால் வெற்ற என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் ராசின் ரவீந்திரா 36 ரன்களும், ருதுராஜ் 1 ரன்களும், துபே 42ரன்களும், கான்வே 69 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டோனி 27 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 9 ரன்களும்,  சங்கர் 2 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழந்து 201 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading