சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வி மற்றும் அதன் முன்னர் ராயல் பெங்களூர் அணியிடம் தோல்வி எல்லாமே ஜூனியர் வீரர் தோனி தலையில் தான் விழுந்தது. ரசிகர்கள் தோனி மிது கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதனிடையே ஷேவாக் இது பற்றிய தனது கருத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது, 2 ஓவர்களில் 40 ரன்கள் அடிப்பது என்பது கடினமான காரியம். நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், அது கடினமான வேலை. அந்த மாதிரி சூழலில் உங்களால் 1-2 போட்டிகளை மட்டுமே வெல்ல முடியும் அவ்வளவுதான். ஒரு முறை அக்சர் படேல் பந்துவீச்சில் தோனி 24 – 25 ரன்கள் அடித்து வெற்றி பெற வைத்தது நினைவிருக்கிறது.
மற்றொரு முறை இர்பான் பதானுக்கு எதிராக 19-20 ரன்கள் அடித்தார். அதுபோன்ற 1-2 போட்டிகள் மட்டுமே உங்கள் நினைவில் இருக்கும். சமீபத்திய போட்டிககளில் தோனி அந்த மாதிரி பினிஷிங் செய்து வெற்றி பெற்று கொடுத்தது நினைவில்லை. 5 ஆண்டுகளாக சென்னை அணியால் 180+ ரன்களை சேசிங் செய்ய முடியவில்லை” என்று கூறினார்.

கடந்த 5 வருடங்களாக சென்னை அணியால் ஒருமுறை கூட 180+ ரன்களை சேசிங் செய்ய முடியவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் சேவாக் விமர்சித்துள்ளார். மேலும் தோனி எவ்வளவு பெரிய பினிஷராக இருந்தாலும் அனைத்து நேரங்களிலும் வெற்றியை பெற்றுக் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.