Headline
புதிய ஆல்டோ கே10 இன் மைலேஜ் 35 கிலோமீட்டர்
சுந்தர்.சி இயக்கத்தில்தான் ரஜினியின் 173-வது படம்! கமல் திட்டம் வெற்றி
இந்தூர் அருகே பேருந்து கவிழ்ந்ததில் மூன்று பேர் பலி! முதல்வர் மோகன் யாதவ் ரூ.2 லட்சம் நிவாரணம்
Kane Williamson retires from T20 cricket
‘பாகுபலி’ ராக்கெட்:  அதிக எடை கொண்ட செயற்கைக்கோளை செலுத்தி இஸ்ரோ வரலாறு
இன்று தங்கம், வெள்ளி விலைகள்: நகர வாரியான விலைகளைப் பாருங்கள்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் M. K. Stalin மலர்தூவி மரியாதை
நீதிபதி சூர்யா காந்த் யார்? இந்தியாவின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைமை நீதிபதி…..
CMS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவ திட்டமிடப்பட்டுள்ளது – Isro
ஹைதராபாத்-பெங்களூரு தனியார் பேருந்து பைக் மோதியதில் தீப்பிடித்தது, குறைந்தது 15 பயணிகள் இறந்திருக்கலாம்!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும்

கோவை, தென்காசி, குமரி, தஞ்சை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு குமரி, நெல்லையின் மாஞ்சோலை உள்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய இருப்பதாகவும், இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

நீலகிரி, வால்பாறை ஆகிய இடங்களுக்கு இன்று[14.06.2025] முதல் அடுத்த 4 நாட்களுக்கு மிகப்பெரிய கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். அதி தீவிர கனமழை இருக்கும். கன்னியாகுமரி, மாஞ்சோலை பகுதிகளில் கனமழை இருக்கும். கேரளா, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், கடலோர கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மிக கனமழை பெய்யும்.

பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பொழியும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி, பார்சன்ஸ் பள்ளத்தாக்கு மற்றும் முகூர்த்தி அணை பகுதிகளை பொறுத்தவரை 24 மணி நேரத்தில் இரட்டை மற்றும் மூன்று சதங்கள் எளிதாக அடிக்கும். இதனால், கவனமாக இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading