ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற 11வது போட்டியில் சென்னையை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது. கௌகாத்தியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் நிதிஷ் ராணா 81 ரன்களை எடுத்த உதவியுடன் 183 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா 0, ராகுல் திரிபாதி 23 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
மிடில் ஆர்டரில்கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் 63 ரன்கள் எடுத்த போதிலும் விஜய் சங்கர் 9, சிவம் துபே 18 ரன்களில் அவுட்டாகி பின்னடைவைக் கொடுத்தனர். கடைசியில் ஜடேஜா 32*, தோனி 16, ஜேமி ஓவர்டன் 11* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 176-6 ரன்களை மட்டுமே எடுத்த சென்னை இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது. ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹசரங்கா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
சிஎஸ்கே அணியின் பேட்டிங் மோசமாக இருக்கும் நிலையில் கடந்தப் போட்டியில் தோனி 9வது இடத்தில் களமிறங்கியது தோல்வியை கொடுத்தது. அதனால் இந்தப் போட்டியில் 7வது இடத்தில் தோனி களமிறங்கியும் வெற்றி காண முடியவில்லை. ரசிகர்கள் விஜய் சங்கர் போன்றவருக்கு பதிலாக தோனி வந்து விளையாடியிருக்கலாம் என்று கருத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால் வெற்றிப் போனாலும் பரவாயில்லை என்ற வகையில் தோனி மேலே வர அடம் பிடிப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களதுகருத்துக்களை கூறியுள்ளார்.
இந்நிலையில் வயது மற்றும் முழங்காலில் செய்த அறுவைச்சிகிச்சை காரணமாக தோனியால் 10 ஓவர்கள் பேட்டிங் செய்ய முடியாது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். பிளெமிங் கூறிய கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.