சாம்பியன் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்தியாவை எதிர்கொண்டு விளையாடியது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வெறும் 241 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனை அடுத்து பாகிஸ்தான் அணி பந்து வீச தொடங்குவதற்கு முன்பு பாகிஸ்தான் அணி கேப்டன் முகமது ரிஸ்வான் தஸ்பி எனப்படும் இறைவனின் பெயரை கூறி பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா ,வர்ணணையில் இருந்தார். அப்போது பேசிய அவர், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போது கடும் நெருக்கடி ஏற்படும். அந்தக் கட்டத்தில் சில வீரர்கள் இறைவனின் உதவியை நாடுவார்கள். முகமது ரிஸ்வான் தஸ்பீ ஓதிக்கொண்டு இருப்பது போல் ரோகித் சர்மா மகாமிருத்திஉஞ்சை மந்திரத்தை ஓதிக் கொண்டு இருப்பார் என்று கூறி கிண்டல் அடித்தார்.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.