அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 47-வது அதிபராக வாஷிங்டனில் இன்று பதவியேற்கிறார்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் அமோக வெற்றி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரீஸ் தோல்வியடைந்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்பது வழக்கம். அதன்படி இன்று அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனல்if ட்ரம்ப் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடமான கேபிடல் அரங்கில் பதவியேற்கிறார்.
அமெரிக்காவின் கோடீஸ்வர தொழிலதிபர்கள் எலான் மஸ்க், ஜெப் பெசாஸ், மார்க் ஜூகர்பெர்க் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முகேஸ் அம்பானி ஆகியோர் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
புதிய அதிபராக பதவியேற்றபின் வெள்ளை மாளிகை திரும்பும் ட்ரம்ப் முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகிறார். தேர்தல் வாக்குறுதிகளை முதல் நாளிலேயே நிறைவேற்றுவேன் என ட்ரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி சில உத்தரவுகளை ட்ரம்ப் பிறப்பிப்பார் என தெரிகிறது. அதிபர் பைடன் ரத்து செய்த சில திட்டங்களை, ட்ரம்ப் மீண்டும் இன்று அமல்படுத்தி உத்தரவு பிறப்பிக்கலாம் என கூறப்படுகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.