அவுரங்கசீப்புக்கு இரண்டு அறை கொடுக்கனும் – நகைச்சுவையாக பேசிய விஜய் தேவரகொண்டா

சிறப்பு விருந்தினராக  நடிகர் விஜய் தேவரகொண்டா ரெட்ரோ பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது தொகுப்பாளர் அவரிடம் இந்த படம் பல வருடத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடக்கும் நிகழ்வாக எடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு அப்படி பழைய காலத்திற்கு செல்ல வேண்டுமென்றால் யாரை சந்திப்பீர்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.

பொதுவாக இதுபோன்ற கேள்விக்கு எல்லோரும் மகாத்மா காந்தியை சந்திப்பேன்,. சுபாஷ் சந்திர போஸை சந்திப்பேன் என்று தானே கூறுவார்கள் ? ஆனால் விஜய் தேவரகொண்டா வித்தியாசமாக, “நான் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ‘சாவா’ திரைப்படத்தை பார்த்தேன். அதில் அவுரங்கசீப்பின் செயல்பாடுகளை பார்த்தபோது, எனக்கு மட்டும் கால எந்திரத்தில் பின்னோக்கி செல்லும் வாய்ப்பு கிடைத்தால் ஆங்கிலேயர் காலத்திற்கு சென்று பிரிட்டிஷ்காரர்களுக்கு இரண்டு அறை கொடுக்க வேண்டும். அது மட்டுமல்ல அவுரங்கசீப்புக்கும் அதேபோல இரண்டு அறை கொடுக்க வேண்டும். அந்த அளவிற்கு எனக்கு கோபம் இருக்கிறது. எனக்கு வரலாற்று காலத்திற்கு பின்னோக்கிப் போக வாய்ப்பு கிடைத்தால் என்னிடம் இது போன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியலே நிறைய இருக்கிறது” என்று கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் பேசி பார்வையாளர்களை சிரிக்க வைத்தார் விஜய் தேவரகொண்டா.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading