தோரணமலை முருகன் கோயிலில் கிரிவலப்பாதை அமைப்பதற்கு அரசு ஆவன செய்யுமா?

தமிழக சட்டபேரையில் கேள்வி நேரத்தின்போது மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., “தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட கடையம் ஒன்றியம், தோரணமலை முருகன் கோயிலில் கிரிவலப்பாதை அமைப்பதற்கு அரசு ஆவன செய்யுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலளித்து பேசியதாவது: “தோரணமலை முருகன் என்பது சித்தர்கள் வழிபாடு மேற்கொண்ட கோயிலாகும். இதற்கு 900 அடி உயரத்தில் அமைந்துள்ள கிரிவலப் பாதை 3 கிமீ நீளம் மற்றும் சுமார் 10 அடி அகலம் கொண்டதாகும். இந்த கிரிவலப் பாதையை சீரமைக்க ரூ.2 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டிருக்கின்றது.

இக்கோயிலுக்கு போதிய நிதி வசதி இல்லாததால் உபயதாரர் நிதி எதிர்நோக்கி இருக்கிறோம். அது இயலாத பட்சத்தில் ஆணையர் பொது நல நிதியிலிருந்து அதற்குண்டான நிதியைப் பெற்றுத் தந்து அந்த பணிகளை நிச்சயம் 3 மாத காலத்துக்குள் மேற்கொள்வோம்,”
என்று அவர் பதில் அளித்தார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading