மகா சிவராத்திரி என்பது இந்து மத கடவுளான சிவனைக் கௌரவிக்கும் வருடாந்திர பண்டிகையாகும். மக்கள் ஒரு நாள் முழுவதும் உண்ணாவிரதம் இருந்து இரவு முழுவதும் விழித்திருந்து கொண்டாடுகிறார்கள். அவர்கள் பஜனை பாடல்களைப் பாடுகிறார்கள், பக்திப் பாடல்களைப் பாடுகிறார்கள் .
பலருக்கும், மகாசிவராத்திரி தொடங்கும் நேரம் எது, முடியும் நேரம் எது என்ற குழப்பங்கள் இருக்கும். பிப்ரவர், 26ஆம் தேதி புதன்கிழமையான நாளை மகாசிவராத்திரி தொடங்குகிறது. இதில் நான்கு காலை பூஜை நடைபெறும். சதுர்திசி திதியில் நாளை காலை 11:08 மணிக்கு தொடங்கும் மகாசிவராத்திரி விரதம், அடுத்த நாளான பிப்ரவரி 27ஆம் தேதி காலை 8:54 மணி அளவில் முடிவடைவதாக கூறப்படுகிறது. பக்தர்கள் அனைவரும், பிப்., 26ஆம் தேதியான நாளை காலைதான் மகாசிவராத்திரியை கொண்டாடுவர்.
விரதம் இருப்பவர்கள், இரவு சிவனுக்கான பூஜைகள் முடிந்த பிறகு மறுநாள் காலையில் அதனை முடித்து கொள்ளலாம் என கூறப்படுகிறது.
அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்து, சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும்.
ஒரு நாள் முழுக்க விரதம் இருக்க வேண்டும்.
சிவன் கோயிலுக்கு சென்று, ருத்ராபிஷேகத்திற்கான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். (பால், தேன், காசு போன்றவை).
ஓம் சிவாய நம’ எனும் மந்திரத்தை உச்சரிக்கலாம்
இரவில் 4 கால பூஜையின் போது விழித்திருந்து அதை மனமுவந்து செய்யலாம்.
சிவராத்திரியன்று கூற வேண்டிய 8 மந்திரங்கள்:
சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் 3 கண்களாக உள்ளனர். சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.
8 பெயர்களை சிவராத்திரியன்று ஜெபிப்பது நல்லது.
1. ஸ்ரீ பவாய நம,
2. ஸ்ரீ சர்வாய நம,
3. ஸ்ரீ பசுபதயே நம,
4. ஸ்ரீ ருத்ராய நம,
5. ஸ்ரீ உக்ராய நம,
6. ஸ்ரீ மஹாதேவாய நம,
7. ஸ்ரீ பீமாய நம,
8. ஸ்ரீ ஈசாராய நம
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.