காஷ்மீரில் திருப்பதி ஏழுமலையான் கோயில்
கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

காஷ்மீரில் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு விழா காஷ்மீரில் புதிதாக திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, மஜீன் என்ற கிராமத்தில் இந்த கோயிலை கட்டுவதற்காக, 62.06 ஏக்கர் நிலத்தை 40 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு காஷ்மீர் அரசு வழங்கி இருக்கிறது. இந்த இடத்தில்தான், பிரம்மாண்டமான ஏழுமலையான் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை 13.6.2021 அன்று நடந்தது. இந்த விழாவில் ஜம்மு காஷ்மீர் கவர்னர்…

Read More

லோக்சபா துணை சபாநாயகர் தேர்வு
காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல்

லோக்சபா துணை சபாநாயகர் தேர்வுகாங்கிரஸ் மீண்டும் வலியுறுத்தல் லோக்சபா துணை சபாநாயகரை உடனே  தேர்வு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு லோக்சபா காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடரின் போது துணை சபாநாயகர் தேர்வை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். துணை சபாநாயகர் பதவி தொடர்ந்து காலியாக நீடிப்பது அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் நெறிமுறைக்கும், மிகவும் நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்ட மரபுக்கும்…

Read More

மத்திய அமைச்சரவை விரிவாக்கம்
மோடி, அமித்ஷா தீவிர ஆலோசனை

மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் மத்திய அமைச்சர்களை சந்தித்து வருகிறார். இதைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டாவுடனும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களை சேர்ந்த 25 எம்பிக்கள் மற்றும் அமைச்சர்களுடன்  அமித்ஷா அவருடைய வீட்டில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலோசனை நடத்தினார்.இந் நிலையில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், …

Read More

காங்கிரஸ், பகுஜன்சமாஜ் கட்சிகளுடன்
கூட்டணி இல்லை: அகிலேஷ் திட்டவட்டம்

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சிக்கு எதிர்ப்பு நிலவுகிறது. இதனால், உ.பி. அமைச்சரவையை மாற்றி அமைத்து மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜ வியூகம் வகுத்து வருகிறது. இந்நிலையில், இந்தி டிவி சேனல் ஒன்றுக்கு சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் அளித்த சிறப்பு பேட்டி: யோகி ஆதித்யா அரசை உ.பி. மக்கள் வெறுக்கின்றனர்….

Read More

சீனா ஆக்கிரமிப்பு தெளிவான பதில் தேவை – மத்திய அரசுக்கு சோனியா மீண்டும் கோரிக்கை

கல்வான் தாக்குதல் சம்பவம் நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. எனினும், சீன ஆக்கிரமிப்பு பற்றி மத்திய அரசு இன்னும் தெளிவான விளக்கம் எதையும் தரவில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து, சோனியா விடுத்துள்ள அறிக்கை:எல்லையில் சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக மத்திய அரசிடம் இருந்து இதுவரை தெளிவான தகவல் வரவில்லை.  இந்த விவகாரத்தில் தெளிவான பதிலை மத்திய அரசு தரும் என கடந்த ஓராண்டாக காங்கிரஸ் பொறுமையுடன் காத்திருந்தது. எத்தகைய சந்தர்ப்ப…

Read More

மோடி நல்ல மனநிலையில் இல்லை

டிரம்ப் கருத்துக்கு இந்தியா மறுப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளைமாளிகையில் செய்தியாளர்களை நேற்று முன்தினம் சந்தித்தார். அப்போது, இந்தியா-சீனா இடையே நிலவும் மோதல் பற்றி அவர் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து, டிரம்ப் கூறியதாவது: இந்திய பிரதமர் மோடியுடன் நான் பேசினேன். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான மிகப்பெரிய மோதலில் மோடி நல்ல மனநிலையில் இல்லை. இந்த நாட்டில் மீடியாக்கள் என்னை விரும்புவதை விட இந்தியாவில் அவர்கள் என்னை அதிகமாக விரும்புவார்கள் என நான் நினைக்கிறேன். மோடியை நான்…

Read More

சீன எல்லையில் என்ன நடக்குது
நாட்டுக்கு உண்மை சொல்லுங்க
ராகுல் காந்தி கேள்வி

எல்லையில் இந்தியா-சீனா இடையே நடக்கும் மோதல் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதன்முறையாக கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து, ராகுல் காந்தி தன்னுடைய டுவிட்டரில் கூறியிருப்பதாவது: லடாக் மற்றும் சிக்கிம் பகுதியில் அமைந்திருக்கும் சீன எல்லையில் நிலவும் நிலவரம் குறித்த குழப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுகுறித்து, அரசு தெளிவுபடுத்த வேண்டும். எல்லையில் சீனாவுடன் நிலவும் நிலவரத்தில் அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பது மிகப்பெரிய யூகத்துக்கே வழி வகுக்கும். மிகவும் நெருக்கடியான நேரத்தில் நிச்சயமற்ற…

Read More

கோல்கத்தாவில் முக்கிய தீவிரவாதி கைது

ஜமாத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த முக்கிய தீவிரவாதி அப்துல் கரீம் என்ற போரோ கரீமை கோல்கத்தா சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். முர்ஷிதாபாத் மாவட்டம் லங்கிபுர் பகுதியில் சுதி பிஎஸ் என்ற இடத்தில் மடக்கிப்பிடித்தனர். ஜேம்பி தலைவர் சலாகுதீன் சலேஹின் உட்பட பல தீவிரவாத தலைவர்களுக்கு தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுத்தவன் அப்துல் கரீம். 2014ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக…

Read More